திருத்துறைப்பூண்டி, ஏப்.15- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே கண்ணந்தகுடியில் மின் கசி வால் அடுத்தடுத்துள்ள மூன்று வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று வீடு களிலும் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கேஎம்.முருகானந்தம், ஒன்றியச் செயலாளர் கே.கதிரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.