districts

img

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதிஉதவி

இராமநாதபுரம், செப்.1 இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நெறிஞ்சிபட்டி கிராமத் தைச் சேர்ந்தவர் குமரவேல்(49). இவர் கம்பி கட்டும் வேலைக்காக அபுதாபி நாட்டிற்கு   ஆகஸ்ட் 14 ஆம் தேதி வேலை க்கு சென்று 15ஆம் தேதி தங்கும் அறைக்கு சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் , தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ராஜகண் ணப்பன் ஆகியோரிடம் இறந்த குமர வேல் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர் . அமைச்சர் ராஜகண்ணப்பன் தலை யிட்டு முதல்வர் உத்தரவின் பேரில் சிறு பான்மை மற்றும் வெளிநாட்டு மக்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் அவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரவேல் உடலை உடனடியாக அங்கிருந்து கொண்டு நடவ டிக்கை எடுக்கப்பட்டு 22ம் தேதி உடல் நெறிஞ்சிபட்டி கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறந்த குமரவேலுக்கு கலைச் செல்வி(45) என்ற மனைவியும் ராஜ் குமார்(18) என்ற மகனும் சித்ராதேவி(13) என்ற மகளும்  உள்ளனர். இவர்கள் மிக வறுமையில் ஆஸ்பெட்டாஸ் வீட்டில் வசித்து வருகின்றனர். கடன்கட்ட வெளிநாட்டு வேலைக்கு சென்று ஒரே நாளில் உயிரிழந்ததால் குமரவேலின் குடும்பம் கஷ்டப்படுவதை அறிந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நிதிஉதவி வழங்க உத்தர விட்டதை தொடர்ந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில் கமுதி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் நிதியுத வியை குமரவேலின் குடும்பத்தினருக்கு வழங்கி இறந்த குமரவேலின் மகன் மற்றும் மகள் படிப்பிற்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் மூலம் உதவி செய்யப் படும் என ஆறுதல் கூறினார்.