districts

img

பேராவூரணி அருகே தீ விபத்து : பாதிக்கப்பட்டவருக்கு நிதியுதவி

தஞ்சாவூர், நவ.14-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை ஊராட்சி, வடக்கு நாடாகாடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராணி (45), விவசாயக் கூலித் தொழி லாளி. இவரது கணவர் பழனிவேல் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், 3 மகள்களுடன் உள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை சிம்னி விளக்கில் இருந்து வெளியேறிய தீப்பொறி கூரையில் பட்டு, அவரது வீடு தீப்பற்றி எரிந்தது.  இதில் வீட்டிலிருந்த பொருட்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாணவியின் பள்ளி சான்றிதழ்கள், தீயில் எரிந்து சேதமானது. இதையடுத்து, பேராவூரணி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர், பாதிக்கப்பட்ட குடும் பத்தினரை சந்தித்து விவரங்களை கேட்ட றிந்தனர்.   இதுகுறித்து தகவல் அறிந்த பேரா வூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்தி னரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி யுதவி வழங்கினர். அப்போது, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், போத்தியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.