districts

அரசுப் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய திரைப்பட தயாரிப்பாளர் ஆண்டுதோறும் வழங்க உள்ளதாக அறிவிப்பு

பொன்னமராவதி, மார்ச் 8-  பொன்னமராவதியில் உள்ள பொன்-புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் ஆண்டு விழா, விளையாட்டு விழா, மாணவர் சேர்க்கை விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம், இலாஹிஜான் ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர் மல்லீஸ்வரி வரவேற்றார். விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோலையப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சின்னையா, பேரூராட்சித் துணைத் தலைவர் வெங்கடேஷ், பேரூராட்சி கவுன்சிலர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான துவார் சந்திரசேகர், பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, தான் படித்த இந்த பள்ளிக்கு ஆண்டுதோறும் பள்ளி வளர்ச்சிக்காக மூன்று லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்தார். அறிவித்த கையோடு ரூபாய் மூன்று லட்சம் வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியர் ராமநாதன் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பழனியப்பன் நன்றியுரையாற்றினார்.