மயிலாடுதுறை, ஜன.05- மயிலாடுதுறை மாவட் டம், செம்பனார்கோயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க வட்டார மாநாடு நடை பெற்றது. மாநாட்டிற்கு வட்டார தலைவர் ராம மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெய ராமன் முன்னிலை வகித்தார். வட்டார இணை செயலாளர் மாலினி வரவேற்றார். சங்கத்தின் மாவட்ட தலை வர் நல்லமுத்து, வட்டார செயலாளர் மாதவன்ராஜ், வட்டார பொருளாளர் முருக வேல் ஆகியோர் பேசினர். மாநாட்டில், ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கி அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். காலி யாக உள்ள ஊராட்சி செய லர் பணியிடங்களை டிஎன்பி எஸ்சி மூலம் நிரப்ப அரசை கேட்டுக் கொள்வது. ஊராட்சி ஒன்றிய சுகாதார ஒருங்கிணைப்பாளர் பணி யிடத்தை நிரந்தரமாக்கி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்ட னர். மாநில செயற்குழு உறுப் பினர் பொன். ராஜேந்திரன் நன்றி கூறினார்.