திருநெல்வேலி ,ஆக 23-
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்ட 18 வயதிற்குள் பட்ட பெண் குழந்தைகள் விருது பெற இம்மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக் கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது-
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங் காற்றும் 18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 ஆம் தேதி மாநில அரசின் விருதும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கப்படுகின்றன.
பிற பெண் குழந்தைகளின் கல் விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கை கள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவி தைகள் மற்றும் கட்டுரைகள் மூல மாக விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல் களை சாதித்து காண்பித்தல் போன்ற தகுதியுடைய பெண் குழந் தைகள், அதற்கான விவரங்களு டன் இம்மாதம் 31-ஆம் தேதிக் குள் விண்ணப்பி க்கலாம்.
மாநில அளவிலான தேர்வுக் குழுவின் கூறாய்வுக்கு பின்னரே விருதாளர் தேர்வு செய்யப்படுவார்.இது தொடர்பான மேலும் விவ ரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், பி4/107, சுப்பிரமணி யபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல் வேலி 627 002 என்ற முகவரி - யிலோ அல்லது 0462- 2576265 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.