மெலட்டூர், மே 16 - பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் இரும்புதலை அருகே உள்ளது விழுதியூர் ஊராட்சி. இந்த ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மெயின் சாலையோ ரம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் பழுதடைந்து, மேல் கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஆங்காங்கே கம்பி கள் தெரிகின்றன. சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததால், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வேறு இடத்தில் இயங்கி வருகிறது. பழுதடைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவ லக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக, தரமாக கட்டித் தர வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.