districts

img

காவிரி நீர் கேட்டு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்/வேதாரண்யம், ஜூன் 18- உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடக அர,சு காவிரி நீரை தமிழ கத்திற்கு வழங்கிட ஒன்றிய அரசை வலி யுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் நாச்சி யார்கோயில் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவர் பி.ஆனந்தன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், சிபிஎம் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றியச் செய லாளர் எஸ்.பழனிவேல், வி.ச. ஒன்றியச்  செயலாளர் ஜி.முருகன், வி.தொ.ச ஒன்றியத் தலைவர்கள் கே.ரெங்கசாமி, சிஐடியு பொறுப்பாளர் ஆர்.ஆரோக்கிய தாஸ், வாலிபர் சங்க ஒன்றியச் செயலா ளர் பிரேம்நாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வேதாரண்யம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் கடைத்தெருவில், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் வேதாரண்யம் தெற்கு  மற்றும் வடக்கு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. பி.எஸ்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கோவை.சுப்பிர மணியன் மற்றும் எம்.என்.அம்பிகாபதி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.