மயிலாடுதுறை, செப்.20 - மழையால் பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு நிவாரணம் கோரிய விவசாயி மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து அனைத்து விவசாய சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளி யன்று சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார். விவசாயிகள் மாப்படுகை அ.ராமலிங்கம், வி.விஸ்வநாதன், தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையால் பயிர்கள் சேதமடைந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக அறிவித்த ரூ.10 கோடி இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட வில்லை. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு நிவாரணம் அறிவித்தும் தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுத்து வருவதை கண்டித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி யும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இதனால் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை சந்தித்து விவசாயி கள் முறையிட்டு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தால், கடந்த வாரம் போராட்டம் தொடர் பாக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விவசாயி ஆர்.அன்பழகன் மீது வழக்கு தொடரப்பட்டது. அப்போது, தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை காலதாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டு நிறுவனம் நேர்மை யான முறையில் இழப்பீடுகளை கணக்கீடு செய்து இழப்பீட்டுத் தொகை மற்றும் பயனாளிகள் பட்டி யலை உடனடியாக வெளியிட வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களில் தற்போது கணக்கீடு செய்யும் முறையில் உள்ள குழப்பமான நடைமுறைகளில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும். பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசா யிகள் வலியுறுத்தினர். மேலும், நிவா ரணம் கேட்டால் வழக்குப்பதிவு செய் வதா? என கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.