districts

img

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து கலசபாக்கத்தில் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை, பிப்.13-  திருவண்ணாமலை மாவட்டம், கலச பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுப்பாதை ஆக்கிரமிப்பு கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கலசபாக்கம்  வட்டாட்சியர் அலு வலகம் அருகே அமைந்துள்ளது நேரு நகர். இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். வட்டாட்சியர் அலு வலகம் அருகே அமைந்துள்ள பொது வழிப்  பாதையை இப்பகுதி மக்கள் பல ஆண்டு களாக  பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், இஸ்லாமிய குடி யிருப்பு, பொன்னாந்தாங்கல், பில்லூர், குன்னடி மேடு, பள்ளிப்பட்டு ஆகிய கிராமங்க ளுக்கு செல்லும் வழியாகவும் இது உள்ளது. தற்போது, இந்த பாதையை மறித்து வட்டாட்சியர் அலுவலகம் சுற்று சுவர் எழுப்பியுள்ளது. அதேபோல், மக்கள் பயன்படுத்தி வந்த வட்டாட்சியர் அலு வலகத்தின் முன்பு இருந்த பொது இடம்  தனிநபர் ஒருவருக்கு பட்டா போட்டு தரப்பட்டுள்ளது.  அருகில் உள்ள வக்பு வாரிய இடத்திற்கு செல்லும் வழியும் அடைக்கப்பட்டு விட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, புதிதாக பாதை அமைத்து தர வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. பிறகு, கலசபாக்கம்  வட்டாட்சிய ரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். போராட்டத்திற்கு கலசப்பாக்கம் பகுதி செயலாளர் சி. சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் டி.கே.வெங்கடேசன், அ. உதயகுமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ப. செல்வன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் ச.குமரன், விவசாயிகள் சங்க நிர்வாகி கள் எல். சிவகுமார், திருமுருகன், அன்பு, பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.