districts

img

காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும்

தஞ்சாவூர், ஜூன் 17 - உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நா டகத்திலிருந்து காவிரியில் தண்ணீர்  வழங்கிட ஒன்றிய அரசு நடவடிக்கை  எடுத்திட வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது.  காவிரியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண் டும். மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிகளை கர்நாடகா அரசு கை விட வேண்டும். கர்நாடக அரசின் அணைக்கட்டும் முயற்சியை ஒன்றிய  அரசு தடுத்து நிறுத்த வேண்டும் அனைத்து நீர்வரத்து வடிகால் வாரிகள், ஏரி-குளங்களை உடனடி யாக தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநில துணைத்தலைவர் கே.முக மது அலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.வி.கண் ணன், மாவட்டத் தலைவர் பி.செந் தில்குமார், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ், கரும்பு விவசாயிகள் சங்கத் தலை வர் ராமசாமி, நலிவடைந்த விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் முகமது இப்ராகிம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேராவூரணி பெரியார் சிலை அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேது பாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் வீ. கருப்பையன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் ஆர்.வாசு மற்றும் சிபிஎம் ஒன்றி யச் செயலாளர்கள் கண்டன உரை யாற்றினர்.  கும்பகோணம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் கும்பகோணம் ஒன்றியக் குழு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா  அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச்  செயலாளர் ஜி.ராஜா தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பழனி ஐயா, மாவட்ட துணைத் தலை வர் என்.கணேசன், விவசாயத் தொழி லாளர் சங்க மாநிலக் குழு உறுப்பி னர் சி.நாகராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், திருவள்ளுவர் விவசாய நலச் சங்க ஒன்றியத் தலைவர் கலைமணி, ஒன்றிய குழு நிர்வாகிகள் சிவசங்கரன் ஜெயரா மன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர், மாநகர் கமிட்டிகள் சார்பில்  திருவெறும்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநகர் மாவட்டத் தலை வர் கே.சி.பாண்டியன் தலைமை வகித் தார். புறநகர் மாவட்டத் தலைவர் கணேசன், மாநகரப் பொருளாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி புற நகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்தி கேயன், திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் குருநாதன் ஆகியோர் பேசினர். ஒன்றியப் பொருளாளர் ஜோதி ராமலிங்கம் நன்றி கூறினார். திருவாரூர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டக் குழு சார்பாக புதிய  ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலை வர் எஸ்.தம்புசாமி தலைமை வகித் தார். மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினார்.