districts

img

பேராவூரணி பகுதியில் தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டை அமைத்துத் தருக!

தஞ்சாவூர், ஜூன் 19-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் தலைவர் கவுரவத் தலைவர்  உ.வேலுச்சாமி, அறந்தாங்கி பி.செல்லத் துரை, பள்ளத்தூர் ஏ.குழந்தைராஜ், டி.செந்தில்குமார், கரம்பக்காடு பி.முத்துராம லிங்கம், பி.கோவிந்தசாமி ஆகியோர் திங்கட்கிழமை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.  அம்மனுவில், “தஞ்சாவூர் மாவட்டம் நெல் மற்றும் தென்னை விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம். பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகள் முழுவதுமாகவும், ஒரத்தநாட்டில் ஒரு பகுதியும் தென்னையை மட்டுமே நம்பி உள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் முழுவதும் தென்னையைச் சார்ந்தே உள்ளது. இதனை அரசின் கவனத்திற்கு பலமுறை நாங்கள் எடுத்துச் சென்றுள்ளோம்.  அரசு சில திட்டங்களை தென்னை விவசாயிகளுக்காக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறது. ஆனாலும் அதனை அமல்படுத்தும் அரசு அதிகாரி களின் அலட்சியத்தினால், விவசாயி களுக்கு சரியான பயன் கிடைப்பதில்லை. தேங்காய் விலை வீழ்ச்சியினாலும் நாளுக்கு நாள் விவசாயிகள் நலிவடைந்து வருகின்றனர். அதிகம் தேங்காய் உற்பத்தியாகும் பேராவூரணிக்கென, தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் இல்லாதது மிகவும் வருத்தமான விஷயம். இவற்றை  தாங்கள் கருத்தில் கொண்டு எங்கள் வாழ்வா தாரத்தைக் காப்பாற்ற கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம். பொது விநியோகத் திட்டத்தின் தேங்காய் எண்ணெய் கொடுப்பதற்கு அரசு ஆலோசித்து வருவதாக செய்தி வந்துள்ளது. இது எங்களுடைய நீண்ட கால கோரிக்கையாகும். அது நிறைவே றினால் தேங்காய்க்கு ஓரளவு விலை கிடைக்கும், தாங்களும் இதற்கு உதவ வேண்டுகிறோம். கடைமடைப் பகுதியான பேராவூரணி பகுதியில் ஆற்றுப் பாசனம் பொய்த்து விட்டதால் அனைவரும் தென்னை விவசாயத்திற்கு மாறி உள்ளனர். ஆனால் தென்னை விவசாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு எங்கள் பகுதியில் தென்னையின் மதிப்பு கூட்டப்பட்ட (Value Adder) பொருள்க ளுக்கான ஒரு மாபெரும் தொழில் பேட்டையை உருவாக்கித் தர வேண்டும். அதுவும் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்தால் தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும். பேராவூரணிக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கான இடம் மற்றும் கட்டிடம் இல்லாமல் நீண்ட காலமாக பாதிக் கப்பட்டுள்ளனர். அதனால் கொப்பரைக் கொள்முதல் நிலையமும் இங்கு அமையப் பெறவில்லை. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தாங்கள் தலையிட்டு அதனை துரிதப்படுத்த வேண்டுகிறோம். தாங்கள் எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றி தர வேண்டுகிறோம்” என கூறப்பட்டி ருந்தது.  மனுவை பெற்றுக் கொண்ட நாடாளு மன்ற உறுப்பினர் ச.முரசொலி, தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி, அமைச்சர்கள், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.