districts

ஏப்.27-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஏப்.20-  

  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 27 (வியாழக்கிழமை) அன்று காலை 10  மணிக்கு மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில்  ஆட்சியர்  கவிதா ராமு தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து  பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.