மயிலாடுதுறை, செப்.27 - இயற்கை இடர்ப்பாடுகளால் விவசாயி களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்பு களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த வும், அவர்கள் வேளாண்மையில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த ஊக்குவிக்கவும், புதுப் பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2020 ஆம் ஆண்டு முதல் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் கோடை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திட அக்ரி கல்சர் இன்சூ ரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறு வனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மயிலாடு துறை குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோயில் ஆகிய வட்டாரங்களில் ரபி நெல் 2 பருவத்திற்கு 282 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. நெல் 3 பருவத்திற்கு 72 வருவாய் கிரா மங்களும், ரபி இதர பருவ பயிர்களான நெல் தரிசு உளுந்து, நெல் தரிசு பச்சை பயறு, நெல் தரிசு பருத்தி, நிலக்கடலை மற்றும் கரும்பு பயிர் களுக்கு குறு வட்டார அளவில் பிர்காக்கள் அறி விக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் 2-க்கு பயிர் காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.35,050 அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகை ஏக்கருக்கு ரூ.526. காப்பீடு செய்ய கடைசி நாள்-15.11.2022. நெல் 3-க்கு காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.35, 050 அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமீயத் தொகை ரூ.526. காப்பீடு செய்ய கடைசி நாள் 15.3.2023. இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவ சாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப் பத்தின் பெயரில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது முன்மொ ழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1432), வங்கி கணக்கு புத்த கத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்தபின் அதற் கான ரசீதை பொது சேவை மையங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங் களில் பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்யும் பயிரின் பெயர், கிராமத்தின் பெயர், புல எண்கள், பரப்புகள் மற்றும் வங்கி கணக்கு எண்கள் ஆகி யவை தவறுதலாக பதிவு செய்திருப்பின் காப்பீடு செய்யும் கடைசி தேதிக்குள் பதிவு செய்த இடத்தில் சரி செய்து கொள்ளலாம். அதன் பிறகு ஏதேனும் தவறு இருப்பின் அதனை ஏற்க இய லாது. மேலும் சந்தேகங்களுக்கு மயிலாடு துறை மாவட்ட காப்பீட்டு நிறுவன அலுவலரின் அலைபேசி எண். 9790004303-ஐ தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.