districts

img

குறுவைப் பயிரைக் காப்பாற்ற ஒரு மாதத்துக்கு தண்ணீர் வேண்டும்

தஞ்சாவூர், செப்.8-  குறுவைப் பயிரைக் காப்பாற்ற ஒரு மாதத்துக்கு தண்ணீர் வேண்டும் என தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன் கிழமை ஆய்வு செய்த வேளாண் உற்பத்தி ஆணையரிடம் விவசாயி கள் வலியுறுத்தினர். தஞ்சாவூர் அருகே, ராமநாதபுரம் கிராமம் எட்டாம் நம்பர் கரம்பை, ஒரத்தநாடு அருகே வெட்டிக்காடு, பருத்திக்கோட்டை, தென்னமநாடு உள்ளிட்ட கிராமங்களில், ஆற்றுப் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்யப் படும் குறுவை பயிர்களை வேளாண்  உற்பத்தி ஆணையரும், அரசு செய லருமான சி.சமயமூர்த்தி புதன்கிழமை பார்வையிட்டார். அப்போது, தென்னமநாடு கிரா மத்தில் ஆய்வு செய்த ஆணையரி டம், விவசாயி புலவன்காடு வி.மாரி யப்பன் கூறுகையில், “குறுவை பயி ருக்கு ஒரு மாதத்துக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இப்போது 5 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடப்படுகிறது. இதுபோல முறை வைத்து விட்டாலும், 6 முறை தண்ணீர்  தேவை. அவ்வாறு விட்டால்தான் பயிரைக் காப்பாற்ற முடியும். மாற்று ஏற்பாடாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு கொடுத் தால், ஆழ்குழாய் மோட்டார் பம்ப் செட் வைத்துள்ளவர்களுக்கு பயனுள் ளதாக இருப்பது மட்டுமின்றி, அருகி லுள்ள ஆற்றுப் பாசன விவசாயிகளுக் கும் தண்ணீர் கொடுக்க வாய்ப்பாக அமையும்” என்றார். இதற்கு ஆணையர் பதிலளிக்கை யில், இதுகுறித்து தமிழக முதல்வ ரிடம் வியாழக்கிழமை தெரிவிப்ப தாகக் கூறினார். இதேபோல, மற்ற பகுதிகளிலும் 20  முதல் 50 நாள்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதாகவும், குறைந்தது 4  அல்லது 5 முறை தண்ணீர் விட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, மருங்குளம் அரசு  தோட்டக்கலைத் துறை பண்ணையி லும், ஆணையர் ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது வேளாண் இணை இயக்குநர் ந.க. நல்லமுத்துராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) கோமதி தங்கம், துணை இயக்குநர்கள் சுஜாதா, பால சரஸ்வதி, தோட்டக்கலைத் துறைத் துணை இயக்குநர் (பொ)  வெங்கட்ராமன், உதவி இயக்குநர்கள்  அய்யம்பெருமாள், கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.