தஞ்சாவூர், ஜூன் 20-
தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 21 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் தஞ்சா வூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு...
மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 27 அன்று (செவ்வாய்) காலை 11 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் கோட்டத் திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.