districts

img

ஒன்றிய பட்ஜெட்டில் விவசாயிகள் புறக்கணிப்பு: ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.9 -  ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் விவசா யத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை. விவசாயத்தில் கார்ப்பரேட் தனியார் கம்பெ னிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. நூறு நாள்  வேலை திட்டத்திற்கு கூடுதலான நிதி ஒதுக்க வில்லை என்பதைக் கண்டித்து, ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் வெள்ளிக் கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதனொரு பகுதியாக தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு  நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப் பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் கோ.திருநாவுக்கரசு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். ஆர்ப்பாட் டத்தை நிறைவு செய்து ஐக்கிய விவசாயிகள்  முன்னணியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் காளியப்பன் பேசினார்.             தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வா கிகள் சோ.பாஸ்கர், அ.பன்னீர்செல்வம்,         பி.செந்தில்குமார், தஞ்சை மாவட்ட விவ சாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் கோவிந்தராஜ், நலிவடைந்த விவசாயிகள் சங்க செயலாளர் இப்ராஹிம், ஐக்கிய விவ சாயிகள் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.