மன்னார்குடி, ஜூலை 21- குறைந்தபட்ச ஆதரவு விலை உட்பட விவசாயிகளின் கோரிக்கைகளை இதுவரை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற நாடாளு மன்றத்தில் நிர்பந்திக்க வேண்டும் என வலி யுறுத்தி, நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூர் மாவட் டம் மன்னார்குடியில் சந்தித்து மனு அளித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், விவ சாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா ளர் பி.எஸ். மாசிலாமணி, மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, நகரச் செயலாளர் ஜி.முத்து கிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் சம்பந்தம், ஒன்றியப் பொருளாளர் ஜி.மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.