districts

விவசாயிகள் அங்கக உரங்களை பயன்படுத்த வேண்டுகோள்

தஞ்சாவூர், ஜூன் 5-  

     அங்கக வேளாண்மை என்பது இயற்கை யுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரி யல் செயல்பாடுகள், அங்கக கழிவுகள் ஆகியவற்றை கொண்டு சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை காக்கும் பயிர் வளர்ப்பு முறையாகும்.  

    அங்கக உரங்களை பயன்படுத்துவதால் பயிர்களின் வளர்ச்சியானது கணிசமான அளவில் அதிகரிக்கிறது. நல்ல தரமற்ற நிலங் களை தரமான வளமான நிலங்களாக மாற்று வதில் அங்கக உரங்கள் முக்கிய பங்கு வகிக் கிறது. அங்கக கழிவுகளை, அங்கக உரங்களாக மட்க வைத்து பயன்படுத்துதல் என்பது மிகவும் முக்கியமானதாகும்.  

   இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் நுண்ணுயிர் கூட்டு கலவையின் பங்கு மகத்தான ஒன்றாக கருதப்படுகிறது. அங்கக கழிவுகளான வைக்கோல், நெல் உமி, பயிர்க் கழிவுகள், நிலக்கடலை தோல், தென்னங்கீற்றுகள், பல பயிர் கழிவு கள், கால்நடை கழிவுகள் மற்றும் வீட்டு காய்கறி கழிவுகள் ஆகியவற்றை மக்க வைப்பதற்கு தமிழ்நாடு நுண்ணுயிர் கூட்டு கலவை பயன்படுத்தப்படுகிறது.  

   இக்கலவையை அங்கக கழிவுகள் மக்குவதற்கு சேர்க்காத பொழுது மக்குதல் செயல் நீண்ட நாட்கள் நடைபெறுகிறது. அதே  சமயம் நுண்ணுயிர் கூட்டு கலவையை சேர்க்கும் பொழுது நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நுண்ணு யிர்களின் செயல்பாடு விரைவாக தொடங்கி,  குறைந்த காலத்தில் மக்குதல் நிறைவேறு கிறது.

     ஒரு டன் அங்ககக் கழிவுகளை மக்க  வைப்பதற்கு, இரண்டு கிலோ நுண்ணுயிர் கூட்டு கலவையை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசலாக்கி, பின்பு அங்கக கழிவு களின் படுக்கையில் நன்றாக தெளித்து கிளறி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்  குறைந்த நார்ச்சத்துள்ள கழிவுகள் 60 முதல் 75 நாட்களிலும், அதிக நார்ச்சத்துள்ள கழிவு கள் 90 முதல் 100 நாட்களிலும் மக்கும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மக்கிய உரத்தை ஒரு ஹெக்டருக்கு ஐந்து டன் பயிரி டுவதற்கு முன் அடியுரமாக மண்ணில் இடு வதன் மூலம் வேதியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பண்புகள் மேம்படுவதோடு பயிர்கள் ஊட்டச்சத்துக்களை ஏதுவாக எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது.  

    எனவே, பட்டுக்கோட்டை வட்டாரத்தில் அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயி கள், அதிக அளவில் நுண்ணுயிர் கலவை யினை பயன்படுத்தி மண் வளத்தை அதி கரிக்குமாறு’’ தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர்  ச.மாலதி தெரிவித்துள்ளார்.