districts

திருச்சி முக்கிய செய்திகள்

விழிப்புணர்வு உறுதிமொழி

பாபநாசம், ஆக.12 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநா சம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் போதைப்  பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்கப் பட்டது. போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதி மொழியை மாணவர்கள் ஏற்றனர். இதில் பாபநாசம் காவல் ஆய்வாளர் இளங்கோவன், பள்ளி தலைமை ஆசிரியர் மணிய ரசன், உதவித் தலைமை ஆசி ரியர் லோகநாதன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், என்.சி.சி அலுவலர் சரவணன் உட்பட  ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பின்பு, பாப நாசத்தின் முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் பேரணி சென்றது.

தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி

தஞ்சாவூர், ஆக.12 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள இருகரை கிராமத்தைச் சேர்ந்த வர் விவசாயி கோவிந்தராஜன் (40). இவர் தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்ததைப் பார்ப்பதற்காகத் தனது சித்தப்பா மகன் பிரபுவுடன் ஞாயிற்றுக்கிழமை மோட்டார்  சைக்கிளில் பின் இருக்கை யில் அமர்ந்து சென்று கொண்டி ருந்தார்.  தஞ்சாவூரிலுள்ள திருச்சி  சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டி ருந்த கார் கதவு திடீரென திறக்கப்பட்டது. அப்போது கோவிந்தராஜன் மீது கார் கதவு  மோதியதால், அவர் நிலை தடு மாறி சாலையில் விழுந்தார். அப்போது, பின்னால் பட்டுக் கோட்டையில் இருந்து தஞ்சாவூ ருக்கு வந்த தனியார் பேருந்தின்  பின் சக்கரத்தில் கோவிந்தரா ஜன் சிக்கி அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

ஆக.13, 20, 27 தஞ்சையில்  கால்நடை வளர்ப்பு பயிற்சி

தஞ்சாவூர், ஆக.12- தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச  பயிற்சிகள் ஆகஸ்ட் 13, 20, 27 ஆம் தேதிகளில் நடை பெற உள்ளன. இதுகுறித்து தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவர் கே. ஜெக தீசன் தெரிவித்திருப்பதாவது:  தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி  வரும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்து ஆக.13, வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு  குறித்து ஆக.20, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து ஆக.27  ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி  வரை இலவச பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவ ரங்களுக்கு 04362 - 264665 என்ற எண்ணில் காலை 10 மணி  முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம் என்று  அவர் தெரிவித்துள்ளார். 

புகையிலைப் பொருட்களை  விற்ற இரு கடைகளுக்கு சீல்

தஞ்சாவூர், ஆக.12 - தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மற்றும் விநியோகம் செய்த இரண்டு  கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் உணவு பாதுகாப்பு துறை நடவ டிக்கை எடுத்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த ரெட்ட வயலில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை, கடந்த 3 தினங்களுக்கு முன்பு பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான காவல் துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும்  புகையிலைப் பொருட்களை விநியோகம் செய்ததாக பேராவூரணியைச் சேர்ந்த ஒரு கடையில் என மொத்தம்  32 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறி முதல் செய்தனர்.  இதையடுத்து, பேராவூரணி உணவுப் பாதுகாப்பு அலு வலர் வேல்முருகன், மேற்பார்வையாளர்கள் அடைக்க லம், ஜான்சன் ஆகியோர், இரண்டு கடைகளையும் 14  நாட்கள் தற்காலிகமாக பூட்டி சீல் வைத்தனர். இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.  இந்நிலையில், அந்த வழியாக உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வந்த வேனை நிறுத்தி சோதனை  செய்தபோது, அதில் காலாவதியான உணவுப் பொருட் கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வேனில் இருந்தவர்களிடம் விசாரிக்கையில், காலாவதியான உணவுப் பொருட்களை கடைகளில் இருந்து திரும்பப் பெற்றதாக தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவ ணங்கள் இல்லாததால், சுமார் 20 கிலோ எடையுள்ள உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டன. 

மாற்றுத்திறனாளிகள் சங்க புதிய கிளை துவக்கம்

கும்பகோணம், ஆக.12  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்த நல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க புதிய கிளை துவக்க விழா பந்தநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. கிளை துவக்க விழாவிற்கு சேகர் தலைமை வகித்தார்.  பந்தநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் நளினி சண்முக வேல் வாழ்த்தி பேசினார். மாவட்ட துணைத் தலைவர் பழ. அன்புமணி சிறப்புரையாற்றினார். தஞ்சை மாவட்ட இணைச் செயலாளர் சரவணன், குடந்தை மாநகரப் பொறுப் பாளர் பாரூக், கணபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பந்தநல்லூர் கிளைத் தலைவராக சேகர், செய லாளராக கஞ்சமலை, பொருளாளராக ராஜேந்திரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். பாபநாசம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே திரு வைகாவூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் புதிய கிளை தொடக்க கூட்டம் நடந்தது. இதற்கு சிவக்கொழுந்து தலைமை வகித்தார். இதில் பாபநாசம் ஒன்றியப் பொறுப்பாளர் ராஜா, ஜோதி, ரேவதி, மாவட்ட  இணைச் செயலர் சரவணன், குடந்தை மாநகரத் தலைவர்  பாரூக் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட துணைத்  தலைவர் அன்புமணி விளக்கவுரையாற்றினார்.

சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி பாதிரிபுரம்-கோவில்பத்துவில் தூர்வாரும் பணி துவக்கம்

திருவாரூர், ஆக.12 - தூர்வாரும் பணி துவங்கியதால், சிபிஎம்  போராட்டம் கைவிடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூ ராட்சியில் பாதிரிபுரம் முதல்  கோவில்பத்து வரை 3 கி.மீ  தூரம் உள்ள பி-வாய்க் காலை தூர்வாரக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, வலங் கைமான்-கோவில்பத்து சாலையில் மறியல் போராட்டம் அறிவிக்கப் பட்டது.  இந்நிலையில் வலங்கை மான் வட்டாட்சியர், பேரூ ராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலை வர், பொதுப்பணி துறை அலு வலர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், உடனடியாக தூர்வா ரும் பணிகளை மேற்கொள் வதாக உறுதியளிக்கப் பட்டது. அதன் அடிப்படை யில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. பி-வாய்க்கால் தூர் வாரும் பணியை துவங்கியதால், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சு வார்த்தையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.தம்புசாமி மற்றும் சிபிஎம் வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.இராதா, மாவட்டக் குழு  உறுப்பினர் கே.சுப்பரமணி யன், நகரச் செயலாளர் கே. முரளி, ஒன்றியக் குழு  உறுப்பினர் எஸ்.இளங்கோ வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்ட அறிவிப்பு வெற்றி பெற்றதையடுத்து, பணியை மேற்கொண்ட அரசு மற்றும் அதிகாரி களுக்கு சிபிஎம் கிளைகள்  சார்பாக நன்றி அறி விப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.