பெரம்பலூர், ஜூலை 31-
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரணி கிளை செயலாளர்கள் இருவர் மீது பெரம்பலூர் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சித்ரா பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து துறை ரீதியாக நட வடிக்கை எடுக்கக்கோரியும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்கை மறு ஆய்வு செய்யக் கோரியும் ஜூலை 31 (திங்களன்று) மகளிர் காவல் நிலையம் முன்பு சிபிஎம் சார்பில் போராட்டம் அறி விக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் பழனிசாமி தலைமை யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் பெ.ரமேஷ், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, எஸ். அகஸ்டின், கலையரசி, யு.மு.ராஜேந்தி ரன், ரங்கநாதன் கோகுலகிருஷ்ணன், ஆலத்தூர் வட்டச் செயலாளர் ஆ.செல்ல துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது காவல் உதவி ஆய்வாளர் சித்ரா இடமாற்றம் செய்யப்படுவார், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது கட்சி தலைவர்கள் வழக்கிலிருந்து நீக்கப்படு வார்கள், இனிமேல் இது போன்ற சம்ப வங்கள் நடைபெறாமல் காவல்துறை கவன மாக வழக்கை கையாளும் என்று காவல் துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சித்ரா குன்னம் காவல் நிலை யத்துக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் காவல்துறை அளித்த உறுதி மொழியை ஏற்று கண்டன ஆர்ப் பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.