தஞ்சாவூர், ஜூன் 14-
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வல்லவன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைக் கண்ணு மகன் சேகர் (54). இவர் புதனன்று காலை 6 மணிக்கு பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
சுமார் 2 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில், சேகர் கட லில் இறங்கி மீன் பிடிப்பதற்காக வலையை இறக்கிக் கொண்டு இருந்துள்ளார். சேகருடன் வந்த சக மீன வர்களும் வேறு பக்கம் வலையை கடலில் இறக்கிக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் படகுக்கு திரும்பிய நிலையில், சேகர் வலை யை இறக்கிய பகுதியில் பார்த்த போது, மயங்கி நிலை யில், கடலில் மூழ்கி கிடந்துள்ளார். உடனடியாக சக மீன வர்கள் அவரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் கட லோர காவல்துறையினர், சேகர் உடலை கைப்பற்றி, பேரா வூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோத னைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.