தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கை விளக்கும் வகையில், திமுக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் “மோடி சுட்ட வடைகள்” என்ற நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், தஞ்சை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா சீனிவாசன், தி.மு.க அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் துளசி அய்யா உள்பட பலர் பங்கேற்றனர்.