மயிலாடுதுறை, ஆக.25 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி யில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு கருத்தாளர் முகாம் ஞாயி றன்று நிறைவடைந்தது. இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் தங்க. முனியாண்டி இராசா தலைமையில் நடை பெற்ற 5 ஆவது அமர்வில், “இந்தியா வில் பண்பாடுகளின் தோற்றமும், வளர்ச்சி யும்” என்ற தலைப்பில் ஆய்வறிஞர் வி. செல்வகுமார் உரையாற்றினார். பி.பாலசுப்ர மணியன் தலைமையில் நடைபெற்ற 6 ஆவது அமர்வில், “சிந்துவெளி எழுத்துகள் ஐராவதம் மகாதேவன் வாசிப்பில்” என்ற தலைப்பில் ஆய்வறிஞர் சுந்தர் கணேசன் உரையாற்றினார். தங்க.முருகேசன் தலை மையில் நடைபெற்ற 7 ஆவது அமர்வில், “சரஸ்வதி நாகரீகம், ஆரியத்தின் கற்பிதம்” என்ற தலைப்பில் ஆய்வறிஞர் பக்தவச்சல பாரதி உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றினார். எழுத்தா ளர்கள் ச.தமிழ்செல்வன், மருதுபாரதி, களப்பிரன், சைதை ஜெ, சங்கத்தின் மயி லாடுதுறை மாவட்டச் செயலாளர் பால சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாம் சிறப்பாக நடைபெற உதவியவர் களையும், பங்காற்றியவர்களையும் கவு ரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.