districts

img

தோழர் ஜெகநாதன் காலமானார்

தஞ்சாவூர், ஜன.30-  அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட முன்னாள் பொருளாளர் தோழர் ஜெக நாதன் ஜன.27 அன்று கால மானார். அவரது இறுதி நிகழ்ச்சி ஜன.28 அன்று நடைபெற்றது.  தோழர் ஜெகநாதன் இன்சூரன்ஸ் ஊழியர்  சங்கத்தின் பொருளாள ராக நீண்ட காலம் பணியாற் றியவர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆதரவா ளராகவும் இருந்தார். அவர்  பணி ஓய்வுபெற்ற பின்ன ரும் கட்சிக்காக பல்வேறு உதவிகளை செய்து வந்த வர். குறிப்பாக தனது ஓய்வூ தியத்தில் இருந்து குறிப்பிட்ட  அளவு பணத்தை வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கில் வைத்து, அதிலிருந்து வரும் பணத்தில் கட்சிக்கும், தீக்க திர் நாளிதழுக்கும், இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்திற் கும் நிதி வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.  தோழர் ஜெகநாதனின் மறைவு கட்சிக்கும், தொழிற் சங்கத்திற்கும் பெரும் இழப்பு என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகி யோர் இரங்கல் தெரி வித்தனர்.  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் கே. சுவாமிநாதன், தஞ்சை கோட்டை தலைவர் செல்வ ராஜ், பொதுச் செயலாளர் சேதுராமன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் களப்பி ரன், மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார், தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் என்.வி.கண் ணன், மாவட்ட தலைவர் பி. செந்தில்குமார் உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர்.