districts

உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும் ஒன்றிய அரசு தொடர வேண்டுமா

தஞ்சாவூர், ஆக.3-  

     உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும் ஒன்றிய அரசு தொடர வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

     தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின்  தகைசால் விருது பெறவுள்ள கி.வீர மணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  

    இதில், பங்கேற்ற அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்தது:-

    இந்த 75 ஆண்டு கால இந்திய வர லாற்றில் நமக்கு தெரிந்த வகையில் உச்ச  நீதிமன்றமே அரசியல் வழக்கில் தலை யிட்டு, அப்பொறுப்பை எடுத்துக் கொண்டு,  விசாரணை நடத்தக்கூடிய அவசர நெருக் கடிக்கு இப்போது உள்ளாகியிருக்கிறது. அதைச் செயல்படுத்த வேண்டிய கட்டம் வந்துவிட்டது.

   மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 6 ஆயி ரத்துக்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவையெல்லாம் என்ன ஆனது எனத் தெரி யவில்லை. காவல்துறை இயக்குநரை நேர டியாக உச்சநீதிமன்ற நீதிபதியே கேட்கி றார்.

   மணிப்பூர் மாநிலம் மூன்று மாதங்க ளாகப் பற்றி எரிகிறது. அங்கு நிகழும் பாலி யல் கொடுமைகள் குறித்து அரசு கவலைப்  படவில்லை. இது தொடர்பாக பிரதமர் வாய்  திறக்கவில்லை. நாடாளுமன்றம் எட்டு  நாள்களாக நடைபெறவில்லை. நடை பெறக்கூடாது என ஆட்சியாளர்கள் நினைப்  பதாகத் தெரிகிறது.

    இந்நிலையில், இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் குறுக்கிட்டுள்ளதும், தார்மீக உரிமை அடிப்படையில் அவர்கள் சொன்னதும், இதுவரையில் இந்த எல்லைக்கு வேறு எந்த ஆட்சிக்கும் சென்ற தாக வரலாறு இல்லை. எனவே, இந்த ஆட்சி  தொடருவதற்கு தார்மீக உரிமை உள்ளதா?  என்பது மிக முக்கியமான கேள்வி. ஒன்றிய அரசைப் பொருத்தவரை நம்பிக்கை இழக்கும்போது, மதக் கல வரத்தை வைத்துக் கொள்கிறது. அந்த வகையில் தற்போது ஹரியானாவில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், அரு கிலுள்ள நாட்டின் தலைநகரான தில்லிக்கும் பரவக்கூடிய அச்ச நிலை உள்ளது.

    தமிழ்நாட்டில் யாத்திரை செல்வதை விட மணிப்பூருக்கு சென்றால்தான் அங்  குள்ள நிலைமை தெரியவரும். எனவே, பாஜகவினரின் பயணங்களும், சட்டம் - ஒழுங்கு சரியில்லை என நீலிக்கண்ணீர் வடிப்பதும் எப்படிப்பட்டது என்பது எல்லோ ருக்கும் புரியும்” என்றார் வீரமணி.