districts

img

டெல்டா மாவட்டங்களில் சமத்துவ, மதநல்லிணக்க பொங்கல் விழா

புதுக்கோட்டை, ஜன.13 - ஜன.15 தைத் திருநாளை (பொங்கல் பண் டிகை) முன்னிட்டு டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை சமத்துவ, மதநல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அரசு குழந்தைகள் இல்லம் புதுக்கோட்டை நகராட்சி, நரிமேடு பகுதி யில், சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் அன்னை சத்தியா அம்மையார் நினைவு  அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வரு கிறது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா,  அந்த இல்லத்திற்கு நேரடியாகச் சென்று  குழந்தைகளுக்கு பொங்கல் வாழ்த்து தெரி வித்து, இல்லத்தில் தயார் செய்யப்பட்டிருந்த பொங்கலை குழந்தைகளுடன் இணைந்து சாப்பிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், வட்டாட்சியர் கவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்ச் சங்கம்

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு தமிழ்ச் சங்கத்  தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித் தார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா, தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் உள்ளிட் டோர் பேசினர். இவ்விழாவில் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த 4 சுற்றுலாப் பயணி கள் பங்கேற்றனர்.

ஆமாஞ்சி ஊராட்சி

அறந்தாங்கியை அடுத்த ஆமாஞ்ஜி ஊராட்சியில் சமத்து பொங்கல் விழா துரையரச புரம் ஊராட்சி மன்ற அலுவலகம் வாயிலில் நடை பெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ரவிச் சந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலை வர் லட்சுமி, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செய லர் புவனேஸ்வரி மற்றும் பொதுமக்கள் பங்கேற் றனர்.

கார்னிவல் கல்லூரி

அறந்தாங்கி அக்ரஹாரம் கார்னிவல் ஸ்கில்  ட்ரைனிங் இன்ஸ்டிடியூட்டில் சமத்துவ பொங்கல்  விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் ஆடிட்டர் தங்கதுரை தலைமையில், முதல்வர் ரங்கசாமி கல்லூரி ஆசிரியைகள் நிர்மலாதேவி, வினோ தினி மற்றும் மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

செலக்சன் பள்ளி

அறந்தாங்கி செலக்சன் கல்வி குழுமம் சார்பாக மத நல்லிணக்க பொங்கல் விழா  நடைபெற்றது. அறந்தாங்கி அம்மா உண வகம் அருகில் இருந்து துவங்கிய பள்ளி மாண வர்களின் பொங்கல் பேரணியை, அறந்தாங்கி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண் முகசுந்தரம் துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர்  கண்ணையன், பள்ளி முதல்வர் கீதப்பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள  டாக்டர் ஜே.சி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ  பொங்கல் விழா நடந்தது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர்  முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி முதல் வர் சர்மிளா மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். மெலட்டூர் பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் தூய்மை பொங்கல் விழா நடந்தது. இதில்  மெலட்டூர் பேரூராட்சித் தலைவர் இலக்கியா, துணைத் தலைவர் பொன்னழகு, செயல் அலுவலர் குமரேசன், கவுன்சிலர்கள், சுய  உதவிக் குழு பெண்கள் பங்கேற்றனர்.

பரணி பார்க் கல்விக் குழுமம்

பரணி பார்க் கல்விக் குழுமத்தில் நடந்த பொங்கல் விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழு மத்தின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தார். பரணி பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் சி.ராமசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். பரணி பார்க் முதல்வர் கே.சேகர், பரணி வித்யாலயா முதல்வர் எஸ்.சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் முதல்வர் பி.சாந்தி, துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்ட னர்.

தரங்கம்பாடி 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. செயல் அலுவலர் கமலகண்ணன் முன்னிலை வகித்தார். தூய்மை  பணிகளை சிறப்பாக செய்யும் ஊழியர்களுக்கு பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா  எம்.முருகன் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை யாற்றினார். 

பெரம்பலூர்

பெரம்பலூர் நான்குரோடு சிஐடியு அலுவல கத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.அகஸ்டின், மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வி,  சிபிஎம் மாவட்ட செயற்குழு டாக்டர் சி.கருணா கரன், சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.சுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழி லாளர் சங்கத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் ஆதர வற்றோர் முதியோர் காப்பகத்தில் சமத்துவ  பொங்கல் விழா நடைபெற்றது. தொழிற்சங்கத் தினர் பலர் கலந்து கொண்டனர்.