அரியலூர், ஜன.16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பரப்ரஹ்மம், பிரபஞ்சம் மற்றும் நமது சூரியக் குடும்பத்திற்கு நன்றி கூறி சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள் தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். செயலாளர் வேல்முருகன், இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் பாரம்பரியம் போற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. முடிவில் பரப்ரஹ்மம் பவுண்டேஷன் செயலாளர் உஷா முத்துக்கும ரன் நன்றி கூறினார்.