திருவாரூர், ஜுன் 26 - உலக யோகா தினத்தையொட்டி, திருவா ரூர் அருகே காட்டூரில் உள்ள ஸ்ரீ தியாக ராஜா கல்வியியல் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் (NSS) சார்பாக கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ந.கணே சன் தலைமையேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பயிற்சி ஆசிரிய மாணாக்கர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட முகாம் ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளவரசி, கணிதத் துறை பேராசிரியர் ஜெ.ஞானவடி வேல், கல்லூரி முதல்வர் கோ.உமா மகேஸ்வரி, பேராசிரியர்கள், அலுவலக பணி யாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.