புதுக்கோட்டை, ஜூன் 3-
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்காக ஜூன் 12 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.
முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவ னங்களுக்கு தேவையான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ள னர். மேலும் 10,12, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் கலந்து கொண்டு தொழிற்பழகுநராக சேர்ந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள உள்ள மாணவ, மாணவர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தொழிற் பழகுநராக தேர்வு செய்யப்படும். மேலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.7000 முதல் ரூ.13,000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.
தொழிற் பழகுநர் பயிற்சியின் முடிவில் ஒன்றிய அரசால் சான்றிதழும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.