districts

img

தோழர் சிவா காலமானார்

திருவாரூர், ஏப்.4 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வடக்கு ஒன்றியப் பகுதியில் உள்ள எண்ணக்குடி கிராமத்தில் வசித்து வந்தவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், வாலிபர் சங்கத் தின் ஒன்றியத் தலைவருமான என். சிவா. இவர் வியாழக்கிழமை காலை  திடீர் உடல்நலக் குறைவால் கால மானார். அவருக்கு வயது 30. தோழர் சிவா திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி மற்றும் அரங்க செய்திகளை உடனுக்குடன் சமூக  வலைதளங்களில் பதிவு செய்து சிறப்பாக பணியாற்றி யவர். இவர் அனைவராலும் ‘காஸ்ட்ரோ சிவா’ என்று அழைக்கப்பட்டவர். அவரது மறைவு செய்தியை அறிந்த மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மறைந்த தோழரின் உட லுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், டி.வீர பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் குடவாசல் (வடக்கு) கே.ரவிச்சந்திரன், நன்னிலம் கே.எம்.லிங்கம்  மற்றும் வாலிபர் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகி கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.