districts

img

உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் மனு

தஞ்சாவூர், ஜூன் 19-  

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.  

    இதில் தஞ்சை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில்  சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால், துணைச் செயலாளர் கே.அன்பு, மாவட்ட பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

      மனுவில், ‘‘மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் என்பதை ரூ.2 ஆயிரம் என வாரியம்  முடிவு செய்ததை உடனடியாக அமல் படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயி ரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பெண்  தொழிலாளர்களுக்கு 35 வயதில் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். 18-ஆம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க  வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளி  இறந்து போனால் அவரது குடும்பத்திற்கு இயற்கை மாணம் மற்றும் ஈமச்சடங்கு உத வித்தொகை வழங்க வேண்டும்.

     தீபாவளி  போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.  பணப்பயன் கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு காலதாமதமின்றி விரைந்து பணப்பயன்களை வழங்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.