அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வீட்டில் அமலாக்கத் துறை!
சென்னை, ஜன.3- தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். வேலூர் மாவட்டம், காட் பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளா கம், அமைச்சரின் நம்பிக் கைக்குரிய பூஞ்சோலை சீனி வாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “அமலாக்கத்துறை சோத னைக்கு வந்த நேரத்தில் நாங் கள் யாரும் வீட்டிலும் இல்லை. இரண்டு பணியா ளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு சோதனை செய்ய வந்திருப்பவர்கள் எந்த துறையைச் சேர்ந்த வர்கள் என்ற விவரங்கள் கூட தெரியாது. எனவே பணி யாளர்களுக்கு சரியாக எதுவும் சொல்லத் தெரிய வில்லை. காட்பாடி சென்ற பிறகுதான் சோதனை குறித்த விவரம் தெரியவரும்” என் றார்.
ஞானசேகரின் மொபைல் டேட்டா புலனாய்வுக் குழு சோதனை!
சென்னை, ஜன.3- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் ஞான சேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழுவை உயர் நீதி மன்றம் அமைத்துள்ளது. இந்நிலையில், இந்த புல னாய்வுக் குழுவினர், ஞானசேகரனின் மொபைலில் கண்டு பிடிக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை அவர் வேறு யாருக்காவது பகிர்ந்துள்ளாரா என்பதைக் கண்டறிய அவரது வாட்ஸ்ஆப் சாட் மற்றும் செல்போன் அழைப்பு களை ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
பொங்கல்: திருச்சிக்கு சிறப்பு ரயில்!
சென்னை, ஜன.3- பொங்கலையொட்டி, சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி - தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில் அறிவித்துள்ளது. திருச்சி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06190) ஜனவரி 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுவழித்தடத்தில் தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06191) ஜன. 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது.
தீரச்சுடர்கள் வேலு நாச்சியார், கட்டபொம்மனின் புகழ் வாழ்க!
சென்னை, ஜன.3- ஆங்கிலேயர்களுடன் சண் டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் [1730 -1796] 295-வது பிறந்த தினமும், ஆங்கி லேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-ஆவது பிறந்த தினமும் வெள்ளிக்கிழ மையன்று கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சி யார் பிறந்த நாளையொட்டி முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு தமது ‘எக்ஸ்’ பக்கத் தில் புகழாரம் சூட்டியுள்ளார். அதில், “ஆதிக்கத்துக்கு அடி பணியும் பேச்சுக்கே இடமில்லை எனத் தாய்நாட்டின் விடுதலைக் காக வெகுண்டெழுந்த தீரச்சுடர் களாம் வீரபாண்டிய கட்டபொம் மன் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியார் ஆகியோரின் புகழ் வாழ்க” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு டோக்கன் விநியோகம்!
சென்னை, ஜன.3- பொங்கல் திருநாளை யொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத் துக்கான டோக்கன்களை ரேசன் கடை ஊழியர்கள் வெள்ளி யன்று வீடு, வீடாக விநியோ கிக்கத் தொடங்கினர். பயனாளி களுக்கு அளிக்கப்பட்டு உள்ள டோக்கனில் எந்தத் தேதியில், எந்த நேரத்தில் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜன வரி 9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்க உள்ளது.
கிரிமினல், சிவில் வழக்குகள் ஒன்றாக இணைப்பு அதானிக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்!
நியூயார்க் நீதிமன்றம் அதிரடி உத்தரவு நியூயார்க், ஜன.3- இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது தொடரப்பட்ட 3 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை யும் ஒன்றாக இணைத்து, விரைந்து விசா ரிக்க நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. கடந்த 2020-24 காலகட்டத்தில் சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் விநியோக ஒப் பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதி காரிகளுக்கு அதானி குழுமம் ரூ. 2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெட ரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர்), முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சவுரவ் அகர்வால் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. அதானி மற்றும் அவரது உறவினர் உள்ளிட்டோர் மீது அமெரிக்க நீதிமன்றத் தில் குற்றவழக்கு தொடரப் பட்டுள்ள நிலை யில், அந்நாட்டின் பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையம் இரண்டு சிவில் வழக்குகளையும் தொடர்ந்தது. இவ்வாறு அதானிக்கு எதிராக குற்ற வியல் வழக்கு, சிவில் வழக்கு போக, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மற்றவர்களுக்கு எதிராகவும் சிவில் வழக்கு உள்ளது. இந்நிலையில், அதானியின் லஞ்ச முறைகேடு தொடர்புடைய மூன்று வழக்கு களின் விசாரணையையும் ஒன்றாக இணைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையின் செயல்திறனை மேம் படுத்துவதற்கும், ஒவ்வொரு வழக்கும் வெவ்வேறு காலங்களில் விசாரிக்கப் படும் வகையில் இருக்கும் முரண்பாடு களைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நியூயார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்குகள் மாவட்ட நீதிபதி நிகோலஸ் ஜி கராபிஸிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இவர் ஏற்கெனவே அதானிக்கு எதி ரான குற்றவியல் வழக்குகளை விசாரித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை ஒருபுறமிருக்க, அதானியின் ஊழல் முறைகேடுகள் நடந்த நாடு இந் தியா என்ற வகையில், இங்கு அவர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும்; தொடர்ந்து ஊழல் முறைகேடு களில் ஈடுபட்டு வரும் அதானியைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. எதிர்க்கட்சிகளின் போராட்டத் தால் நாடாளுமன்றமே முடங்கியது. எனி னும், தற்போது வரை ஒன்றிய பாஜக அரசு, தங்களின் செல்லப்பிள்ளையான அதானி யைப் பாதுகாத்து வருவது குறிப்பிடத் தக்கது.
ஜன. 6-இல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் பேரவைத் தலைவர் சந்திப்பு!
சென்னை, ஜன. 3 - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு வெள்ளிக்கிழமையன்று சந்தித்தார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 6-ஆம் தேதி திங்கட் கிழமை, காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளு நர் பங்கேற்று உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்த வருமாறு, ஆளுநர் ஆர்.என். ரவியை, பேரவைத் தலைவர் மு. அப்பாவு வெள்ளியன்று ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
ரீரங்கத்தில் ஐந்து கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருச்சிராப்பள்ளி, ஜன.3- திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கீழசித்திரை வீதியில் ஹோட்டல் மற்றும் பாத்திரக்கடை உள்ளது.வியாழக் கிழமை இரவு கடையை பூட்டி விட்டு கடையின் உரிமை யாளர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை விடியற்காலை மேற்கண்ட இரண்டு கடையின் பூட்டை கொள்ளை கும்பல் உடைத்து கடையில் உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த பணம், பொருட்களை திருடினர். இதே போன்று மூலத்தோப்பு பகுதியில் உள்ள மளிகை கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு அந்த கடையில் இருந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். கலை வாணர் தெருவில் உள்ள சலூன் கடையின் பூட்டு உடைக் கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. மேலும் மாம்பழச் சாலையில் உள்ள ஒரு கடையில் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்த டின் பீர்களை கொள்ளை கும்பல் குடித்து விட்டு சென்று விட்டனர். காலையில் கடையை திறக்க சென்ற வியாபாரிகள் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து, மேற்கண்ட 5 கடைக ளில் விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சிசி டிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் உயர் அதி காரிகள் ஆலோசனையின் பேரில் தனிப்படை அமைக் கப்பட்டு ஐந்து கடைகளில் கொள்ளையடித்த மர்ம ஆசாமி களை போலீசார் வலை விசி தேடி வருகின்றனர்.
கழிவுநீர் செல்வதில் தகராறு அரிவாளால் வெட்டியவர் கைது
அரியலூர், ஜன.3- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் பரமேஸ்வரன் (16). இவரது வீட்டிற்கும் அருகில் வசிக்கும் முருகேசன் மகன் பாஸ்கர் (48) என்பவர் வீட்டிற்கும் முன்பாக கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்நிலையில், ஜனவரி 1 அன்று மாலை பாஸ்கர், பரமேஸ்வரனிடம் தகராறு செய்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், அரிவாளால் பரமேஸ்வரனை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பரமேஸ்வ ரனை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
அரியலூர், ஜன.3- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் பூசாரி தெருவைச் சேர்ந்தவர் ஹோட்டல் உரிமையாளர் பழனி என்பவரின் மகன் தினேஷ் குமார் (28), இடையாறு கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் கலியபெருமாள் (26). நண்பர்களான இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சின்ன வளையத்திற்கு சொந்த வேலையாக வந்துவிட்டு, மீண்டும் உடையார்பாளையம் நோக்கிச் சென்றனர். சின்ன வளையம் பைபாஸ் சாலையில் பெரியவளையம் பிரிவு பாதை அருகே, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே திருச்சியிலிருந்து மீன்சுருட்டி நோக்கி வந்த கார் கலியபெருமாள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதில், தினேஷ்குமார், தடுப்பு சுவரைத் தாண்டி கீழே விழுந்ததில் சம்பவ இடத்தி லேயே பவியானார். படுகாயம் அடைந்த கலியபெரு மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதில், காரில் பாதுகாப்பு உபகரணங்கள் இருந்த தால் காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. சாய்தளமான பாலத்தால் தொடரும் விபத்து இதுகுறித்து அறிந்த ஜெயங்கொண்டம் காவல்துறை யினர், தினேஷ் குமாரின் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மேம்பாலம் சாய்தளமாக உள்ளதால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் நிகழ்வதாக மக்கள் கூறுகின்றனர். எனவே அந்த பைபாஸ் சாலையை சமதளமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழைநீரால் துர்நாற்றம் : மக்கள் அவதி
பாபநாசம், ஜன. 3- கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் அய்யம்பேட்டை அடுத்துள்ளது பசுபதி கோவில் ஊராட்சி. பசுபதி கோயில் ஊரா ட்சியில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்ற னர். எனவே மழை நீரை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், பசுபதி கோவில் ஊராட்சி பெரிய ஊராட்சியாகும். எஸ்.என். நகர் 3 ஆம் தெருவில் சமீபத்தில் பெய்த மழையால் குடியி ருப்பு பகுதியைச் சுற்றி மழை நீர் தேங்கி யுள்ளது. துர்நாற்றம் வீசும் இந்த தண்ணீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு.மக்கள் பாதிக்கப் படும் ஆபத்து உள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் வரத் தொடங்கி விட்டன. எனவே மழை நீரை வடியச் செய்ய மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்றிய அரசு நிதியை விட நெருக்கடிதான் கொடுக்கிறது
ஒன்றிய அரசு நிதியை விட நெருக்கடிதான் கொடுக்கிறது வேளாண் வளர்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை சரியாகக் கொடுப்பதில்லை. ஒன்றிய அரசு கொடுக்காவிட்டாலும், தமிழக அரசே பொறுப்பேற்றுக் கொடுக்கிறது. தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறதே தவிர, நிதி தருவதில்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 4 ஆண்டுகளில் மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ. 1,023 கோடி அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது ஏற்பட்ட புய லால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து அரசு கணக்கீடு எடுத்து வருகிறது” என்றார்.