தஞ்சாவூர், மே 8- இஸ்ரேல் - பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வரக் கோரியும், இஸ்ரே லுக்கு ஆதரவாக செயல் பட்டு வரும் அமெரிக்க அர சைக் கண்டித்தும், அமெ ரிக்காவில் போராடிய பல்கலைக்கழக மாணவர் கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை கைது செய்த தைக் கண்டித்தும், இந்திய மாணவர் சங்கம் தஞ்சாவூர் மாவட்டக் குழு சார்பாக பனகல் கட்டடம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் அர்ஜுன் தலைமை வகித்தார். சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் கு. சந்துரு, மாநில மையக் குழு உறுப்பினர் ஜி.கே. மோகன், மாநில செயற் குழு உறுப்பினர் ஜனார்த்த னன், திருச்சி மாநகர் தலை வர் சூர்யா, திருச்சி புறநகர் தலைவர் வைரவளவன், திருச்சி புறநகர் மாவட்டச் செயலர் ஆமோஷ் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர். தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் ஜோஸ்வா நன்றி கூறினார்.