திருச்சிராப்பள்ளி,டிச,10- கரூர், புதுக்கோட்டை, கும்பகோ ணம், திண்டிவனம் ஆகிய ஆர்எம்எஸ் அலுவலகங்களை மூடு வதற்கு அஞ்சல் துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மக்களின் நலன் மற்றும் ஊழியர்கள் நலன் கருதி ஆர்.எம்.எஸ் அலு வலகங்களை மூடக்கூடாது என் பதை வலியுறுத்தி அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஊழியர் சங்கங்களின் இணைப்புக் குழு மற்றும் ஓய்வூதி யர்கள் சங்கங்கள் சார்பில், திருச்சி தலைமை தபால் நிலையம் முன் திங்கள் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி, மதிமுக துணை பொதுச்செயலா ளர் டாக்டர் ரொகையா பீவி, மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.