districts

பல்லுயிர் ஆதாரங்களைக் கொண்ட அரிட்டாபட்டியில் கனிம சுரங்க ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது!

புதுக்கோட்டை, டிச.29 - பல்லுயிர் மற்றும் பண்பாட்டு வள ஆதாரங் களைக் கொண்ட மதுரை அரிட்டாபட்டியில் எவ்விதமான கனிம சுரங்க ஆய்வுகளையும் மேற்கொள்ள ஒன்றிய அரசு முயற்சிக்கக் கூடாது என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.கே.கங்கா தலைமை வகித்தார். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் லெட்சுமி நாராயணா, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் த.அறம், பொருளாளர் ப.பா.ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூற்றாண்டு விழாக்கள்... பொதுவுடைமை இயக்க நூற்றாண்டு விழாவை திருச்சியிலும், தோழர் ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவை கோவில் பட்டியிலும், குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவை திருப்பூரிலும், எழுத்தாளர் திகசியின் நூற்றாண்டு விழாவை  நெல்லையிலும், எழுத்தாளர் ராஜம்கிருஷ் ணன் நூற்றாண்டு விழாவை திருவாரூரிலும், சிந்துவெளி நூற்றாண்டு விழாவை மதுரையிலும் மாநில மையம் சார்பில் நடத்திட கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. மேலும், தெலுங்கில் பிரபலமான எழுத்தாளர் சாரதா நடராஜனின் நூற்றாண்டு  கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் பிறந்த புதுக்கோட்டை மாநகரில் ஒரு தெரு அல்லது அரசுப் பள்ளி அல்லது நூல கத்துக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள படி, பல்கலைக்கழகப் பிரதிநிதி, மாநில அரசுப் பிரதிநிதி மற்றும் ஆளுநர் பிரதிநிதி  என்ற 3 உறுப்பினர்களை கொண்ட தேடுதல்  குழுக்களை அமைத்து, துணைவேந்தர் பணி யிடங்களை விரைந்து நியமிக்க வேண்டும். பல்லுயிர் மற்றும் பண்பாட்டு வள ஆதாரங்களைக் கொண்ட மதுரை அரிட்டா பட்டியில் எவ்விதமான கனிம சுரங்க ஆய்வுகளையும் மேற்கொள்ள ஒன்றிய அரசு முயற்சிக்கக் கூடாது. அந்தத் திட்டத்தை  முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.