districts

img

விவசாயத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 14 - விவசாய - விவசாய கூலிகளின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி  ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களை உரு வாக்க வேண்டும். வீடற்ற விவசாயத்  தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சத்தில்  வீடு கட்டித்தர வேண்டும். ஒருங்கி ணைந்த மத்திய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில் மத்திய  கவுன்சில் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம்  திருச்சியில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாளான சனிக்கிழமை அன்று  நம்பர் 1 டோல்கேட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் புறநகர்  மாவட்டச் செயலாளர் ஜெ.சுப்பிரமணி யன் தலைமை வகித்தார். வரவேற்புக் குழு துணைத் தலைவர் கனகராஜ் வர வேற்றார். மாநில பொதுச் செயலாளர் வீ.  அமிர்தலிங்கம் துவக்க உரையாற்றினார்.

அகில இந்திய தலைவர் ஏ.விஜயரா கவன் முன்னாள் எம்.பி, அகில இந்திய பொதுச்செயலாளர் பி.வெங்கட், அகில இந்திய துணைத் தலைவர்கள் ஏ.லாசர், கோமள குமாரி, அகில இந்திய இணைச் செயலாளர்கள் வி.சிவதாசன் எம்.பி., டாக்டர் விக்ரம்சிங் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் வரவேற்பு குழு தலைவர்  எஸ்.ஸ்ரீதர், வரவேற்பு குழு செயலா ளர் எம்.ஜெயசீலன், மாநிலச் செயலாளர்  வி.மாரியப்பன், மாநிலக் குழு உறுப்பினர்  எஸ்.சந்திரன், மாநகர் மாவட்டத் தலைவர்  என்.தங்கதுரை, மாநிலத் தலைவர் மா. சின்னதுரை, மாநில துணைத் தலைவர் பி.வசந்தாமணி, மாநில பொருளாளர் எ.பழநிசாமி, மாவட்ட தலைவர் எஸ். தெய்வநீதி, மாவட்ட துணைத் தலைவர் எம்.வீரவிஜயன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை, மாநிலக்குழு  உறுப்பினர் எம்.கண்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் இரா.முத்துக்குமார்,  ஆர்.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் மாருதி  சக்தி நன்றி கூறினார்.