புவியியல் ஆய்வுத்துறை ஆய்வு செய்ய வலியுறுத்தல் புதுக்கோட்டை, அக்.30- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே பள்ளி மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் பல ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய கல்மரம் ஒன்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவம் அமைப்பின் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாநகரச் செயலாளரு மான புதுகை ச.பாண்டியன் தெரி வித்திருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மிரட்டுநிலை அரசுப் உயர்நி லைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மா. ஜீவிதா தலைமையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொன்னாம்பட்டி கிராமத் தில் உள்ள காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற் கொண்டனர். இங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காலநிலை மாற்றத்தால் எரி மலைக்குழம்பு வெளிவந்தும், விண் கற்கள் வெடித்துச்சிதறி பூமியின் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தி ருந்த டைனோசர், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பல்வகை உயிரினங்கள் இயற்கையாகவே அழி வுக்குள்ளாகியது. இதனால் பூமியின் பெரும் பகுதியில் எண்ணற்ற உயிரி னங்களும் தாவரங்களும் புதையுண்டு பல கோடி ஆண்டுகளாக பூமிக்கடி யில் சிக்கியுள்ளன. சுண்ணாம்புப் பாறைகளின் இடை யில் சிக்கியதன் காரணமாகவும், காரத்தன்மையின் காரணமாக மட்கா மல் அதே நிலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக, கரிமப் பொருளாக மட்கும் நிலையில் உள்ள மரம் கடல்வாழ் உயிரிகள், கனிமப் பொரு ளால் ஆன படிமங்களாக மாறிவிட்டன. இந்த நிகழ்வு ஏற்பட நீண்ட நெடிய காலங்களை எடுத்துக் கொள்கிறது. கல் மரம் என்பது தொல்லுயிர் எச்சம் என்றும், உயிருடன் மண்ணுக்குள் புதையுண்ட உயிரினங்கள் மட்டுமே தொல்லுயிர் எச்சங்களாக மாற்றம் அடைகின்றன என்று அறிவியல் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. அதிக கல் மரப் படிவங்கள் தமிழகத்தில் அரியலூர், கடலூர் மாவட்டம் திருவக்கரை, பெரம்பலூர் போன்ற இடங்களில் கல் மரப் படி வங்கள் அதிக அளவில் கிடைத் துள்ளன. புதுக்கோட்டையில் நரிமேடு பகுதியில் ஏற்கனவே, இரண்டு கல்மர துண்டுகள் கிடைத்துள்ளன. தற்போது கிடைத்த கல் மரத்துண்டுகள் மண்ணில் புதைந்த நிலையில் காணப் படுகிறது. இவை மிக நீண்டதாக இருந்து, தற்போது உடைந்து பல பாகங்களாக காணப்படுகிறது. இந்த இடத்தினை இந்திய புவியி யல் ஆய்வுத் துறை ஆய்வு செய்து, இதன் தொடர்ச்சி மற்றும் இதன் வகை யினை கண்டறிய வேண்டும். இதனை வேறொரு இடத்தில் மாற்றி காட்சிப் படுத்தாமல் அதே இடத்தில் அருங்காட் சியகமாக அல்லது புவியியல் பார்வை யிடமாக அறிவித்து சுற்றுலா பயணி கள் வந்து செல்லும் வகையில் தேவை யான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசும் தொல்லியல்துறையும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்