தஞ்சாவூர், ஜூலை 24-
அரசு அலுவலகங்கள் அனைத்தி லும் காது கேளாதோர், வாய் பேசா தோர் புரிந்து கொள்ளும் வகையில் சைகை மொழி பெயர்ப்பாளர் வசதி யை ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், காது கேளாதோர்-வாய் பேசாதோருக்கு ஒரு விழுக்காடு தனி யாக ஒதுக்க வேண்டும். காது கேட்கும் கருவிகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசாணை எண் 151ன்படி நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வாய் பேசாதோர், காது கேளாதோர் திங்கள்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத் தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கஸ்தூரி, மாவட்டப் பொருளாளர் மோகன், மாவட்ட துணைத்தலைவர் அன்புமணி, துணைச் செயலாளர் சாமியப்பன் மற்றும் வாய் பேசா தோர், காது கேளாதோர் பலர் கலந்து கொண்டனர்.