districts

img

ஆவணம் - துலுக்கவிடுதி இடையே வனப்பகுதியில் சாலை அமைக்க அனுமதி வழங்குக!

தஞ்சாவூர், அக்.27 -  தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முர சொலி, தில்லியில் உள்ள சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில், உதவி ஆய்வாளர் தீரஜ் மிட்டலை நேரில் சந்தித்து, தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஆவணம் வனப்பகு தியில் சாலை மற்றும் இதர வசதிகளை அமைத்திட தமிழ்நாடு அரசின் கோரிக் கையை வலியுறுத்தி ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆவணம் கிராமத்தில் இருந்து அருகே உள்ள துலுக்கவிடுதி கிராமத்திற்கு செல்லும் வழியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இதில், வனச்சட்டம் காரணமாக சாலை அமைக்க முடியாத நிலை உள்ளது. இங்கு சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்தால் எளிதாக பொதுமக்கள் வந்து செல்லும் வகை உள்ளது. ஆனால், வனத்துறை அனுமதி மறுப்பதால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.  இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பொருட்கள் வாங்க  கடைவீதிக்கு செல்வோர், அவசர சிகிச்சைக் காக மருத்துவமனை செல்வோர், அரசு  அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக் காக செல்வோர் என துலுக்கவிடுதி பகுதியைச்  சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச்  சேர்ந்த சுமார் 2,000 பேர் பாதிக்கப்படு கின்றனர். எனவே ராமநாதன், பாலு உள்ளிட்ட  இப்பகுதி மக்கள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இலக்கியா நெப்போலியன் தலை மையில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமாரை சந்தித்து  கோரிக்கை விடுத்தனர். அவரது ஆலோச னையின் பேரில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.  இந்த வழியாக பாதை அமைக்க மாவட்ட  வன அலுவலர் பரிந்துரைத்ததன் பேரில்,  தமிழ்நாடு வனத்துறை தலைவர் உள்ளிட் டோர் அனுமதி வழங்கிய நிலையில், ஒன்றிய  அரசின் வனத்துறை அனுமதிக்காக சாலை  அமைக்கும் பணி காத்திருப்பதை நாடாளு மன்ற உறுப்பினர் ச.முரசொலி ஒன்றிய அரசின் வனத்துறை உயர் அலுவலரிடம் எடுத்து கூறினார். இதைத் தொடர்ந்து தீரஜ் மிட்டல், சென்னையில் உள்ள ஒன்றிய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக அதிகாரிகளுக்கு இந்த கோரிக் கையை பரிசீலனை செய்து உடனடியாக ஆவன செய்யுமாறு உத்தரவிட்டார்.