districts

img

உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைத்திடுக!

தஞ்சாவூர், ஜூலை 3-  தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நட வடிக்கைக் குழு சார்பில், அர சாணை எண்.243-ஐ ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு தொடர் பான உச்ச நீதிமன்ற வழக்கு முடி யும் வரை மாறுதல் கலந்தாய்வு நட வடிக்கைகளை நிறுத்தி வைக்க  வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் ஆங்காங்கே பணியிடங்கள் மறைக்கப்பட்டு, வெளிப்படையற்ற தன்மையுடன் முறைகேடாக நடந்த கலந்தாய்வு களை கண்டித்தும் பட்டுக்கோட்டை  மாவட்ட கல்வி அலுவலகம் (தொ டக்க கல்வி) முன்பு புதன்கிழமை  மறியல் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு டிட்டோ ஜாக்  ஒருங்கிணைப்பாளர் க.மதியழகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ராக வன் துரை, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்  செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் எழிலரசன், தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் இரா. கண்ணதாசன் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். இதில் 138 பேர் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து ஊர்வல மாக வந்து, மாவட்ட கல்வி அலுவ லகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர்  இதேபோல், தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதில், கோரிக் கைகளை வலியுறுத்தி பழைய  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பின்னர் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் 90 பேரையும், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் 138 பேர் என மொத்தம் 228 ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அரியலூர் அரியலூரில் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக் கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர், புதன்கிழமை அரியலூ ரில் பொது கலந்தாய்வு நடை பெற்ற வட்டார வள மையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து அரியலூர் நகர  காவல் துறையினர் போராட்டத் தில் ஈடுபட்ட 148 பேரை கைது  செய்து மாலையில் விடுவித்தனர்.  போராட்டத்துக்கு அந்த இயக் கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.  கருணாநிதி, இ.எழில் ஆகியோர் தலைமை வகித்தனர்.

;