districts

img

மின் வாரியத்தை பிரிக்கக் கூடாது! மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.24-  மின்வாரியத்தை மூன்று பிரிவுகளாக பிரிப்பதை கண்டித்து தஞ்சாவூர் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மின்வாரிய முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி, ஏற்கனவே மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்த மின்வாரியத்தை, திரும்பவும் 3 பிரிவுகளாக பிரிப்பதை கண்டித்து, தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு ஒப்பந்தத்தில் கை யெழுத்திடாமல் வெளியேறியது. இதனை விளக்கி மாநிலம் தழுவிய விளக்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் தஞ்சை மின்வாரிய மேற்பார்வை  பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக் கிழமை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், மின் ஊழியர் மத்திய  அமைப்பின் திட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கல் ராஜ் தலைமை வகித்தார். திட்டச்  செயலாளர் காணிக்கை ராஜ், திட்டப் பொரு ளாளர் சு.சங்கர் ஆகியோர் விளக்கவுரை யாற்றினர்.  சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெய பால், திட்ட கௌரவத் தலைவர் டி.கோவிந்த ராஜ், கும்பகோணம் கோட்டம் தலைவர் சேக் அகமது உஸ்மான் உசேன், திட்டத் தலை வர் மணிவண்ணன், ஒரத்தநாடு கோட்டச் செயலாளர் ரவி, தஞ்சை கோட்டத் தலைவர் கலையரசன், பட்டுக்கோட்டை கோட்ட துணைத் தலைவர் ஆரோக்கியசாமி உள்ளிட் டோர் பேசினர்.