districts

img

கரூரில் மின் வாரிய கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கரூர், பிப்.7-  சண்டிகர், உத்தரப்பிரதேசம் மாநில மின் வாரியங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். சண்டிகர், உத்தரப்பிரதேச மாநில அரசுகளை கண்டித்தும், இரண்டு மாநில மின் வாரிய ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டுக் குழு சார்பில் கரூர் மின் வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் மா. பால்ராஜ் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சங்க மாநிலச் செயலாளர் க.தனபால், மின் வாரிய பொறியாளர் சங்க மாவட்டச் செயலாளர் மா.முருகன், ஐக்கிய சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.சுபாஷ், ஒர்கர்ஸ் பெடரேசன் மாவட்டச் செயலாளர் நா.பிரேமா, மின்வாரிய பொறியாளர் கழகம் சு.அசோக்குமார், டிஎன்பிஇஎப் கரூர் மாவட்ட தலைவர் எம்.விஜயகுமார் ஆகியோர் உரையாற்றினர்.