districts

img

போனஸ் பேச்சுவார்த்தையை உடனே துவக்கிடுக: திருச்சியில் மின் ஊழியர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்,26- ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், 1. 12 .2019க்கு பிறகு பணியில் சேர்ந்த கேங்மேன் உள்ளிட்ட அனைவருக்கும் 6 சதவிகித ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி போனஸ் பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்,  பகுதிநேர பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய அமைப்பு( சிஐடியு) சார்பில் திருச்சியில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருச்சி பெருநகர் வட்டக் கிளை சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், டி.என்.பி.இ.ஓ மாநில துணைப் பொதுச் செயலாளர் இருதயராஜ்,  டிஎன்இபி டபிள்யுஒ வட்ட செயலாளர் பன்னீர் செல்வம் ஆகிய பேசினர்.