திருச்சிராப்பள்ளி, மார்ச் 21 - தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக (சிஐடியு) சங்க சிறப்பு பேரவை வியா ழனன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத் திற்கு சங்க மாநிலத் தலைவர் அருள் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சங்க பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நாடாளுமன்ற தேர்தல் நிதியாக ரூ.25,000, திருச்சி சி.டபுள்யூ.எஸ்.எஸ் கிளை சார்பாக மாவட்டச் செயலாளரிடம் வழங்கப்பட்டது. முன்னதாக விரைவு போக்குவரத்து கழக சங்க பொதுச் செயலாளர் கனக ராஜ் வரவேற்றார். திருச்சி கிளைச் செயலாளர் ராமய்யா நன்றி கூறினார். அரியலூர் அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் நிதி அளிப்பு பேரவை மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா சிறப்பு ரையாற்றினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.