கரூர், ஏப்.11- இந்தியா முழுவதும் ஏழு கட்ட மாக நாடாளுமன்றத் தேர்தல் நடை பெறுகிறது. முதல் கட்டமாக தமிழ கத்தில் ஏப்ரல் 19 அன்று நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளு மன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக செ.ஜோதிமணி போட்டியிடுகிறார். அவருக்கு கைச் சின்னத்தில் தீவிர வாக்குச் சேக ரிப்பு நடைபெற்று வருகிறது. வேட்பாளர் செ.ஜோதிமணிக்கு கைச் சின்னத்தில் வாக்கு கேட்டு இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் பாலவிடுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடை பெற்றது. பொதுக் கூட்டத்திற்கு திமுக கட வூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். கரூர் நாடாளுமன்றத் தேர்தல் திமுக பொறுப்பாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கே.சிவகாமசுந்தரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, கடவூர் வட்டச் செயலாளர் பி.பழனிவேல், கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர் பி.வேல்முருகன், காங்கிரஸ் கடவூர் வட்டச் செய லாளர் டி.மலையாண்டி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாலவிடுதி திமுக கிளை செய லாளர் எம்.கருப்பையா நன்றி கூறி னார். புதுகை பூபாலம் குழுவின ரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.