திருப்பூர், மார்ச் 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் ஞாயிறன்று நாடாளுமன்ற தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிதியாக ரூ.4 லட்சத்து 26 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், பல்லக வுண்டன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நிதியளிப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற் றது. ஊத்துக்குளி தாலுகா குழு உறுப்பினர் வி.காமராஜ் தலைமை வகித்தார். பல்லகவுண்டன்பாளையம் கிளைச் செயலாளர் கே.கண்ணையன் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு பங்கேற்று சிறப்புரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிரமணி யன், ஆர்.குமார், தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கு.சரஸ்வதி ஆகியோர் பேசி னர். தாலுகா குழு உறுப்பினர் க.பிரகாஷ் நன்றி தெரிவித் தார். முன்னதாக உடுமலை துரையரசன் தலைமையில் தமு எகச மக்கள் கலைக்குழு இசைப்பாடல் நிகழ்ச்சி நடைபெற் றது. சிறுமி பிருந்தா நடனம் அரங்கேற்றப்பட்டது. தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர்.மணியன், கே.ஏ.சிவசாமி, பல்லக வுண்டன்பாளையம் மாதர் கிளைச் செயலாளர் வி.மீராலட் சுமி, நடுப்பட்டி கிளைச் செயலாளர் மு.பழனிசாமி உட்பட திர ளான தாய்மார்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட னர்.