districts

img

எரிவாயு உருளையில் ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

மயிலாடுதுறை, மார்ச் 29 - நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தரங்கம்பாடியில் உள்ள கேஸ் ஏஜென்சிகள் மூலம் எரிவாயு உருளையில் ‘என் வாக்கு என் உரிமை’  என்ற வாசகம் பதிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை  ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், பொறை யாரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் தலைமை வகித்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் பாபு, மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், மாலா  கேஸ் ஏஜென்சி மேலாளர் கிருபாகரன்,  வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாடாளுமன்றத் தேர்த லையொட்டி வாக்காளர்கள் நேர்மை யாக 100 சதவீதம் வாக்களிக்க வலியு றுத்தி “என் ஓட்டு என் உரிமை” என்னும்  விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது.  இதையொட்டி, “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு ஸ்டிக் கரை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய எரிவாயு உருளையில் ஒட்டியும், வாக்காளர் உதவி மையம் இலவச தொடர்பு எண்.1950 வடிவத்தை காட்சிப் படுத்தி, புதுமையான முறையில் பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இந்நிகழ்ச்சியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், ஒரத்த நாடு வட்டாட்சியர் சுந்தரச் செல்வி மற்றும் பலர் கொண்டனர்.