திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்கள வைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு ஆதரவு திரட்டி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி என்.பஞ்சம்பட்டி பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஒரு மூதாட்டி, ‘‘உடம்பு நல்லா இருக்கா, நீங்க நல்லா இருக்கீங்க ளா’’ என்று கேட்டதற்கு, ‘‘உங்கள் ஆதர வில் நான் எப்போதும் நன்றாக இருப் பேன்’’ என்று கூறியவுடன், அந்த மூதாட்டி ‘‘அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்கு மட்டும் தான் எனது ஓட்டு’’ என்று நெகிழ்ச்சி யுடன் கூறினார். ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் என் பஞ்சம் பட்டியில் மேலும் பெண்கள் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆரத்தி எடுத்து ஆதரவு தெரிவித்த னர்.