திருச்சிராப்பள்ளி, ஜூன் 15-
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; வியாழனன்று முதியோர் மீதான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதின உறுதிமொழி அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேர ணியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது.